சேமிப்பின் முக்கிய அடையாளமாகத் திகழும் தங்கம் விலை, கடந்த சில நாட்களாக பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டிய நிலையில், இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்து சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் இருமுறை மாற்றங்கள் செய்யப்பட்டன. காலையில் குறைந்த விலை மாலையில் மீண்டும் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்றைய நிலவரப்படி (ஏப்ரல் 7), 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.13,860-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய அதிரடி உயர்வு (ஏப்ரல் 8): ஆனால், இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர்நிறுத்தம் குறித்த அறிவிப்புகளுக்கு இடையே இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.2,720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் மற்றும் வெள்ளி விலை: ஆபரணத் தங்கம் மட்டுமல்லாது, 18 காரட் தங்கம் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரை, கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நகை வாங்குவோரை கலக்கமடையச் செய்துள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


