நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💼 வணிகம்
  3. >பான் கார்டு திருத்தத்தில் மாற்றம்: புதிய படிவங்களை வெளியிட்டது வருமான வரித்துறை
💼 வணிகம்

பான் கார்டு திருத்தத்தில் மாற்றம்: புதிய படிவங்களை வெளியிட்டது வருமான வரித்துறை

புதன், ஏப்ரல் ௧, ௨௦௨௬|19 மணி நேரம் முன்|abi sudha m|The Indian Express
பான் கார்டு திருத்தத்தில் மாற்றம்: புதிய படிவங்களை வெளியிட்டது வருமான வரித்துறை

பான் கார்டு (PAN Card) விவரங்களில் திருத்தங்கள் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) புதிய படிவங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1, 2026 முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதுவரை பான் கார்டு திருத்தங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த நடைமுறைகளுக்குப் பதிலாக, இனி விண்ணப்பதாரர்கள் தங்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப பின்வரும் புதிய படிவங்களைப் பயன்படுத்த வேண்டும்: பான் சி.ஆர்.-01 (PAN CR-01): இது தனிநபர்களுக்கான (Individuals) திருத்தப் படிவம். பான் சி.ஆர்.-02 (PAN CR-02): இது நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் போன்ற தனிநபர் அல்லாத (Non-Individuals) விண்ணப்பதாரர்களுக்கான படிவம். விண்ணப்பிக்கும் முறை பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம்: ஆன்லைன் முறை: அதிகாரப்பூர்வ (Protean eGov UTIITSL) இணையதளங்கள் வாயிலாக நேரடியாக விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் முறை: அங்கீகரிக்கப்பட்ட பான் சேவை மையங்களில் படிவங்களை நேரில் சமர்ப்பிக்கலாம். புதிய நடைமுறையின் கீழ் விண்ணப்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விதிகளை வருமான வரித்துறை பட்டியலிட்டுள்ளது: *விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினரைத் தவிர, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாகும். *திருத்தம் கோரும் போது ஏற்கனவே உள்ள பான் கார்டின் நகலை இணைக்க வேண்டும். ஒருவேளை பான் கார்டு தொலைந்து போயிருந்தால், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். *விண்ணப்பத்தில் இரண்டு சமீபத்திய வண்ணப் புகைப்படங்களை (4.5 செ.மீ x 3.5 செ.மீ) ஒட்ட வேண்டும். புகைப்படத்தின் மீது ஸ்டேப்ளர் பின் (Staple) அடிக்கக்கூடாது. இடதுபுறம் உள்ள புகைப்படத்தின் மீது குறுக்காக கையெழுத்திட வேண்டும். *ஆஃப்லைனில் விண்ணப்பிப்பவர்கள் படிவத்தை ஆங்கிலத்தில், பெரிய எழுத்துக்களில் (BLOCK LETTERS) கருப்பு நிற மையில் மட்டுமே நிரப்ப வேண்டும். *விண்ணப்பத்தின் வலது கீழ் பகுதியில் உள்ள பெட்டிக்குள் கையெழுத்திட : வேண்டும். பெருவிரல் ரேகை வைப்பவர்கள், அதை மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி பொது அதிகாரியிடம் சான்றொப்பம் (Attestation) பெற வேண்டியது அவசியம். உங்களின் பான் விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் கார்டு மட்டும் சேதமடைந்துள்ளது அல்லது தொலைந்துவிட்டது என்றால், நீங்கள் புதிய படிவங்களை நிரப்பத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, UTIITSL அல்லது Protean இணையதளங்களுக்குச் சென்று ரிபிரிண்ட் ('Reprint') வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்படித் திருத்தம் செய்வது? புதிய படிவத்தில் வழங்கப்பட்டுள்ள வரிசை எண்களில், எந்த விவரத்தை நீங்கள் மாற்ற விரும்புகிறீர்களோ (உதாரணத்திற்கு: பெயர் அல்லது பிறந்த தேதி), அதற்கு நேராக உள்ள பெட்டியில் டிக் (Tick) செய்துவிட்டு, சரியான விவரங்களை நிரப்ப வேண்டும். வருமான வரி விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றம், பான் தரவுகளை மிகவும் துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு: வாக்காளர்களுக்கு தாம்பூலம் வழங்கல்
வணிகம்

தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு: வாக்காளர்களுக்கு தாம்பூலம் வழங்கல்

காஞ்சிபுரம்: சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
மகாவீர ர் புகழ் பாடி ஜெயின் மக்கள் ஊர்வலம்
வணிகம்

மகாவீர ர் புகழ் பாடி ஜெயின் மக்கள் ஊர்வலம்

திருப்பூர்:திருப்பூரில் வசிக்கும் ஜெயின் மக்கள், மகாவீர் ஜெயந்தி விழாவை நேற்று முன்தினம் விமரிசையாக இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்கள் கவனத்துக்கு.. இன்று முதல் புதிய விதிமுறை!
வணிகம்

வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்கள் கவனத்துக்கு.. இன்று முதல் புதிய விதிமுறை!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வீட்டு வாடகை மற்றும் வாடகை ஒப்பந்தம் தொடர்பான புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்