மகளிருக்கு ரூ. 8,000 இல்லத்தரசி கூப்பன் பற்றி அமைச்சர் கீதா ஜீவன்...
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மகளிருக்கு ரூ. 8,000 இல்லத்தரசி கூப்பன் பற்றி அமைச்சர் கீதா ஜீவன்...
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

சென்னை,சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் மு இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Gold Investment Guide : இந்தியாவில் தங்கம் என்பது வெறும் நகை மட்டுமல்ல, அது சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படும் நிலையில் தங்கத்தை நகையாக வாங்குவது சிறந்ததா அல்லது நாணயமாக வாங்குவது சிறந்ததா என்பது குறித்து பார்க்கலாம். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

பாகிஸ்தான் நாடு தனது நீண்டகால நண்பரான ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) வாங்கிய சுமார் 3.5 பில்லியன் டாலர் கடனை இந்த மாதத்திற்குள் முழுமையாகத் திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாகக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் கால நீட்டிப்பு (Rollover) செய்து வந்த பாகிஸ்தான், இப்போது திடீரென இந்த முடிவை எடுத்திருப்பது சர்வதேசப் பொருளாதார வட்டாரத்தில் கவனித்தைப் பெற்றுள்ளது. வழக்கமாக, வளைகுடா நாடுகள் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி இருப்பு சரிவதைத் தடுக்க அந்நாட்டு மத்திய வங்கியில் பெரிய தொகையை டெபாசிட் செய்யும். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் வரும்போது, பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று அமீரகம் அதைத் திருப்பிப் பெறாமல் கால நீட்டிப்பு செய்துவிடும். ஆங்கிலத்தில் வாசிக்க ஆனால், சமீபகாலமாக அபுதாபி இந்த டெபாசிட்டுகளுக்கு நீண்டகால நீட்டிப்பு வழங்காமல், ஒவ்வொரு மாதமும் மட்டும் நீட்டிப்பு செய்யும் குறுகிய கால நடைமுறைக்கு மாறியது. இது பாகிஸ்தான் அரசுக்கு நிதி ரீதியாகப் பெரிய தயக்கத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியது. திடீரென ஒரு மாத இறுதியில் அமீரகம் கடனை நீட்டிக்க மறுத்தால் என்ன செய்வது? என்ற அச்சம் நிலவியது. இந்த குழப்பத்தைத் தவிர்க்கவே, கடனை முழுமையாக அடைக்க பாகிஸ்தான் தற்போது முன்வந்துள்ளது. 30 ஆண்டுகாலப் பழைய கடன் இந்த 3.5 பில்லியன் டாலர் கடனில், ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதில் 450 மில்லியன் டாலர் கடன் என்பது 1996-97 காலகட்டத்தில் வாங்கப்பட்டது. வெறும் ஓராண்டு காலத்திற்காக வாங்கப்பட்ட இந்தக் கடன், கடந்த 30 ஆண்டுகளாகத் திருப்பிச் செலுத்தப்படாமல் தொடர்ந்து கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்தக் குறிப்பிட்ட 450 மில்லியன் டாலர் தொகையை அடுத்த வாரமே பாகிஸ்தான் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன: சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற உலகளாவிய கடன் வழங்கும் அமைப்புகளிடம் பாகிஸ்தான் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது. நிலுவையில் உள்ள கடன்களை முறையாக அடைப்பதன் மூலம், சர்வதேச நிதிச் சந்தையில் தனது நிலையை மேம்படுத்த பாகிஸ்தான் விரும்புகிறது. வெறும் கடனாகப் பெறுவதை விட, அமீரகத்தின் பணத்தை பாகிஸ்தானின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடாக (Investment) மாற்ற அந்நாடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டு, அந்தத் தொகையை முதலீடாக மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வருவதே பாகிஸ்தானின் தற்போதைய வியூகம். தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், அமீரகத்தின் இந்த அதிரடி "டெபாசிட் கெடுபிடி" காரணமாக, தனது பொருளாதாரக் கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.