தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே இணைந்து பணியாற்றி இருந்தாலும், இளையராஜா வைரமுத்து கூட்டணியில் வநத பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது. அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் வெளியான கடைசி படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் வைரமுத்து. தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்று போற்றப்படுவர் வைரமுத்து பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்கை கொடுத்துள்ள இவர், 1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக காளி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். அதன்பிறகு 1986-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் தான் இவர்கள் கூட்டணியில் வெளியாக கடைசி படம் என்று சொல்லலாம். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக இந்த படத்தில், அனைத்து பாடல்களையுமே வைரமுத்து தான் எழுதியிருந்தார். கமல்ஹாசன், ரேவதி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் ரேகா இருவரும் படத்தின் ஆரம்பத்தில் தற்கொலை செய்துகொள்ள போகும் முன், என்ன சத்தம் இந்த நேரம் என்ற பாடல் வரும். காதலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த பாடல் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட வரி குறித்து பேசிய வைரமுத்து அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இந்த பாடலில் உள்ளே, மங்கை அவள் வாய் திறந்தாள் மல்லிகைப்பூ வாசம் என்ற வரிகள் குறித்து கேட்டபோது, அவள் வாய் ஒரு மலர், அவள் பற்கள் மல்லிகை மொட்டுக்கள், அவள் வாய் திறந்தவுடன் மொட்டுக்கள் மலர்ந்துவிடுவதால், மல்லிகைப்பூ வாசம் காதலனுக்கு தெரியும். ஆனால் சராசரி மனிதனுக்கு தெரியாது. காதலன் எப்படி கற்பித்துக்கொள்கிறானே அந்த உலகம் அவனுக்குள் உற்பத்தியாகும் என்று வைரமுத்து கூறியுள்ளார். இந்த பாடல் இன்றைக்கும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ஒரு பாடலாக இருக்கிறது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



