சித்திரை பௌர்ணமி நாளில் பெரும்பாக்கியதை பெற எளிய வழிபாடு.!


சித்திரை பௌர்ணமி நாளில் சித்திரகுப்தரை வழிபாடு செய்து உப்பு சேர்க்காத சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகளை நைவேத்தியம் செய்து நோட்டு, பேனா மற்றும் நவதானியம் போன்றவற்றை பிறருக்கு தானமாக கொடுத்தால் நமது முன் ஜென்ம பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் விரதம் இருந்து கிரிவலம் வந்து ஏழை எளியவருக்கு அன்னதானம் செய்வதன் மூலம் ஏழு பிறவி பாவங்களையும் நீக்கி புண்ணியத்தை பெறலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சித்ரா பௌர்ணமி நாளில் அதிகாலை சுத்தமான நீரில் குளித்து சித்ரகுப்தரின் படத்தை வைத்து அவருக்கு அவல், சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகளை படைத்து வழிபட வேண்டும். பின்னர், அரிசி, காய்கறிகள், பேனா, நோட்டு, புத்தகங்கள், நவதானியம் உள்ளிட்டவற்றை முறத்தில் வைத்து ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இந்த நாளில் உப்பு இல்லாத உணவை தான் நாம் நைவேத்தியம் செய்து சாப்பிட வேண்டும். இதனால், பாவ விமோசனம் கிடைக்கும். திருவண்ணாமலை போன்ற சிவ தலங்களுக்கு கிரிவலம் செய்வது நமது கர்ம வினைகளை போக்க உதவும். இதையும் படிங்க: Maha Shivaratri: மகா சிவராத்திரி 2026.. விரதத்தின் பலன்கள் கிடைக்க இதெல்லாம் கட்டாயம்..! காமதேனுவின் அம்சமான சித்திரகுப்தர் மகிழ்ச்சி அடைந்து அருள் கொடுக்க வேண்டுமானால் அன்று கோ பூஜை எனும் பசுவை பூஜை செய்வது சிறந்தது. இந்த நாளில் சித்திரகுப்தர் பூஜை முடிந்த பின்னர் வாசலில் கோலம் இட்டு அவர் தெற்கு திசையில் இருந்து வருவதாக நினைத்து அதன் பின் உள்ளே நுழைந்ததும் கோலத்தை அழித்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும். இதையும் படிங்க: இன்று அமாவாசை.. மாலைக்குள் இதை கண்டிப்பாக பண்ணிடுங்க..!
இந்தச் செய்தி Tamil Spark ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அண்மைக்காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட தவெக தொண்டர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையாடல் எக்ஸ் உள்ளிட்ட பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பின் அருகிலுள்ள ராமராயர் மண்டபம் சென்றடைந்து அங்கு நடைபெறும் தசாவதாரம் நிகழ்ச்சிகள் ஆகும். இந்த நிகழ்வின் காரணம் என்ன என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தென்னிந்தியாவில் உள்ள நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு இடையில் ஒரு புதிய இணைப்பு ஏற்படும் என்ற செய்தியை நாம் இன்று அறிந்து கொள்ள முடிந்தது. நடிகர் கார்த்தி தெலுங்கு இயக்குநர் அகண்டா அவர்களுடன் புதிய கதையை இணையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் இவர்களுக்குள் ஏற்பட்ட இணைப்பின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். இந்த இணைப்பில் நடிகர் கார்த்தி மற்றும் தெலுங்கு இயக்குநர் அகண்டா ஆகியோர் இணைந்து புதிய கதையை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் தெலுங்கு படங்களிலும் பணியாற்ற இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.