நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >‘சைக்கோ கொலைகாரனின்’ ஆட்டம் க்ளோஸ்! பிளஸ்-2 மாணவி வழக்கில் மதுரை ஹைகோர்ட் அதிரடி... தர்மமுனீஸ்வரன் ஜாமீன் கேன்சல்!
🎬 சினிமா

‘சைக்கோ கொலைகாரனின்’ ஆட்டம் க்ளோஸ்! பிளஸ்-2 மாணவி வழக்கில் மதுரை ஹைகோர்ட் அதிரடி... தர்மமுனீஸ்வரன் ஜாமீன் கேன்சல்!

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|news desk|Ipd Tamil - Latest Tamil News
‘சைக்கோ கொலைகாரனின்’ ஆட்டம் க்ளோஸ்! பிளஸ்-2 மாணவி வழக்கில் மதுரை ஹைகோர்ட் அதிரடி... தர்மமுனீஸ்வரன் ஜாமீன் கேன்சல்!

மூதாட்டியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தபோது மாணவியை சிதைத்த கொடூரம்... தூத்துக்குடியில் மீண்டும் ‘டென்ஷன்’... ‘கம்பியை’ எண்ணப்போகிறான் குற்றவாளி! தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிரவைத்த பிளஸ்-2 மாணவியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், இன்று அதிரடியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றும், சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி ஜாமீனில் வெளியே சுற்றித் திரிந்த தர்மமுனீஸ்வரன் என்பவனின் ஜாமீனை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் சிக்கிய ‘ஹிஸ்டரி ஷீட்டர்’ ஒருவன், ஜாமீனில் வந்தபோது மீண்டும் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த சம்பவம், சட்டத்தின் ஓட்டைகளை எந்தளவுக்கு ஒரு கிரிமினல் பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட பெற்றோருக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது. விளாத்திகுளம் பகுதியில் கடந்த சில காலத்திற்கு முன்பு பிளஸ்-2 படித்து வந்த அந்த ஏழை மாணவி, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளியாகக் கருதப்பட்ட தர்மமுனீஸ்வரனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. ஆனால், தண்டனை அனுபவித்து வந்த அந்த ‘கிரிமினல்’, மேல்முறையீடு மற்றும் சில காரணங்களைக் காட்டி ஜாமீன் பெற்று வெளியில் வந்தான். ஒரு சைக்கோ கொலைகாரன் ஜாமீனில் வெளியே சுதந்திரமாக நடமாடுவது தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், தங்கள் மகளின் ஆன்மா சாந்தியடைய அவன் மீண்டும் சிறை செல்ல வேண்டும் என்றும் அந்த மாணவியின் பெற்றோர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் பின்னணியை ஆராய்ந்த போதுதான் அதிர்ச்சிகரமான தகவல்கள் ‘லீக்’ ஆகின. தர்மமுனீஸ்வரன் ஏற்கனவே ஒரு மூதாட்டியைப் படுகொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கைதி ஆவான். அந்த வழக்கிலிருந்து ‘பெயில்’ பெற்று வெளியே வந்த காலத்தில்தான், ஒரு மிருகத்தைப் போல மாறி இந்த பிளஸ்-2 மாணவியைக் குறிவைத்துத் தனது வெறிச்செயலை அரங்கேற்றியுள்ளான். ஏற்கனவே ஒரு கொலையைச் செய்துவிட்டு ஜாமீனில் வந்தவன், மீண்டும் ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்திருப்பது காவல்துறை மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் ‘ஷாக்’கை ஏற்படுத்தியது. இவனைப் போன்ற ஆபத்தான குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட சலுகை, சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பதைப் பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆணித்தரமாக முன்வைத்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், தர்மமுனீஸ்வரன் தரப்பு வாதங்களைத் தூக்கி எறிந்ததோடு, அவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர். மீண்டும் அவனைப் பிடித்துச் சிறையில் அடைக்கக் காவல்துறைக்குத் தெளிவான ‘சிக்னல்’ கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் காட்டுத்தீ போலப் பரவியது. மாணவியின் குடும்பத்தினர் இந்தத் தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் மல்க நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தனர். ஒரு ‘சைக்கோ கொலைகாரனை’ மீண்டும் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியது, சட்டத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் இந்த உத்தரவை அடுத்து உடனடியாகக் களமிறங்கி, தர்மமுனீஸ்வரனை மீண்டும் கைது செய்யும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜாமீனில் வெளிவந்தபோது அவர் மீது இருந்த கண்காணிப்புக் குறைபாடுகள் குறித்தும் இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், நீதிமன்றத்தின் இந்த அதிரடி ‘ஆக்ஷன்’ மூலம், தொடர் குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு ஒரு பலமான ‘செக்’ வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிஞ்சு மாணவியின் உயிரைப் பறித்தவனுக்கு இனி எந்தச் சலுகையும் கிடைக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்தச் செய்தி Ipd Tamil - Latest Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Ipd Tamil - Latest Tamil News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ஈரானில் ஆட்சியைப் பிடித்த இராணுவம்? உளவுத் துறை அமைச்சர் நியமனத்தில் மோதல்!
சினிமா

ஈரானில் ஆட்சியைப் பிடித்த இராணுவம்? உளவுத் துறை அமைச்சர் நியமனத்தில் மோதல்!

Iran Crisis: IRGC Sidelines President Masoud Pezeshkian /ஈரானில் ஆட்சியைப் பிடித்த இராணுவம்? உளவுத் துறை அமைச்சர் நியமனத்தில் மோதல்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் புனரமைக்க உள்ளாவூர் பக்தர்கள் வலியுறுத்தல்
சினிமா

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் புனரமைக்க உள்ளாவூர் பக்தர்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்:உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
விஜய் வருகையால் பாதிப்பு இல்லை: 100% திமுக வெற்றி உறுதி - சபரீசன்
சினிமா

விஜய் வருகையால் பாதிப்பு இல்லை: 100% திமுக வெற்றி உறுதி - சபரீசன்

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிடுவது தொடர்பாக சபரீசன் பேசியது குறித்து... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்