சினிமாதனுஷின் சூப்பர் ஹிட் படம், நான் பண்ண வேண்டியது; வலியோடு கேமியோ கேரக்டரில் நடித்தேன்: பிரபல நடிகர் ஓபன் டாக்
தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திருவிழளயடல் ஆரம்பம் படம் நான் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது நான் வோறரு படத்தில் நடித்ததால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று நடிகர் பரத் கூறியுள்ளார். பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமான பரத், அதன்பிறகு, காதல், பிப்ரவரி 14, எம்.மகன் உள்ளிட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். செல்லமே படத்தில் வில்லனாக நடித்திருந்த இவர், மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவின் தம்பியாக வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். தற்போது காளிதாஸ் 2 என்ற படத்தில் நடித்துள்ள பரத், இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தான் மிஸ் செய்த திரைப்படங்கள் குறித்து பேசியுள்ளார். இதில், தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் படம் நான் நடிக்க வேண்டியது. அப்போது நான் பிப்ரவரி 14 படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். இயக்குனர் பூபதி பாண்டியன் என்னிடம் கதை சொன்னபோது. ஏதோ ஒன்று எனக்கு வொர்க் ஆகவில்லை. அதனால் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். அதன்பிறகு அது தனுஷ்க்கு சென்றுவிட்டது. அதேபோல நான் நடித்த காதல் திரைப்படம் தனுஷ் நடிக்க வேண்டிய படம் என் நினைக்கிறேன். அதேபோல் கோ படம் நான் நடிக்க வேண்டி கே.வி.ஆனந்த் என்னிடம் கதை சொன்னார். என் சினிமா வாழ்க்கையில் நான் தவறவிட்ட மிகப்பெரிய திரைப்படம் அது. அந்த படத்திற்காக முதன் முதலில் டெஸ்ட் ஷூட் எடுத்தது என்னைத்தான். ஆனால் அவர் கேட்டுக்கொண்டதால், பெரிய வலியோடு அந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தேன். கண்டேன் காதலை படம் பாடல் ஷூட்டிங்கின்போது ஒரு அருவியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு செல்போன் வசதி இல்லை. எனக்கு ட்ரை பண்ணி பார்த்துவிட்டு நான் கிடைக்கவில்லை என்று வேறொருவரை கமிட் செய்தவிட்டார்கள். இந்த படங்களை மிஸ் செய்தது என் வாழ்க்கையில் பெரிய இழப்பு என்று பரத் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட திருவிளையாடல் ஆரம்பம், கோ ஆகிய இரண்டு படங்களுமே பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஜீவாவின் திரை வாழ்க்கையில் கோ அவருக்கு பெரிய வெற்றிப்படம். அதேபோல் தனுஷ்க்கு திருவிளையாடல் ஆரம்பம் படம் காமெடி கேரக்ரிலும் அசத்துவார் என்று அவர் மீது நம்பிக்கை வரும் வகையில் அந்த படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.