நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >Trump Iran War Video: “இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்
🎬 சினிமா

Trump Iran War Video: “இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்

வெள்ளி, ஏப்ரல் ௩, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|ஸ்ரீராம் ஆராவமுதன்|Abp News
Trump Iran War Video: “இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரின் முக்கிய கட்டமாக, இரு தரப்பும் பயங்கர மிரட்டல்களை விடுத்துவரும் நிலையில், நேற்று அது உச்ச கட்டத்தை எட்டியது. அதைத் தொடர்ந்து, ஈரானின் மிகப்பெரிய பாலம் தாக்குதலில் இடிந்து விழும் வீடியோவை வெளியிட்டுள்ள ட்ரம்ப், இன்னும் கூட தாமதமாகவில்லை, உடனடியாக ஒப்பந்தத்திற்கு வாருங்கள் என்று ஈரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, துபாயில் உள்ள மிக முக்கியமான இடங்களை ஈரான் தாக்கியுள்ளது. என்ன நடக்கிறது.? இப்போது பார்க்கலாம். வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப் நேற்று அமெரிக்க மக்களிடையே உரையாற்றியபோது, ஈரானுக்கு கடும் மிரட்டல்களை விடுத்திருந்தார் ட்ரம்ப். அதாவது, அடுத்த 2, 3 வாரங்கள் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும், அவர்கள் கற்கால யுகத்திற்கே செல்வார்கள் என்று அவர் கூறியிருந்தார். அமெரிக்காவின் முக்கியமான இலக்குகள் நிறைவேறும் நிலையில் உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் முடியும் என்று அவர் கூறிய நிலையில், ஈரானின் மிகப் பெரிய பாலம் நேற்று தாக்கி அழிக்கப்படும் வீடியோவை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ட்ரம்ப். அந்த பதிவில், “மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் ஈரனின் மிகப் பெரிய பாலம் இடிந்து விழுகிறது. இதேபோல் இன்னும் நிறைய தொடரும். காலம் கடந்து, ஒரு மாபெரும் நாடாக உருவெடுப்பதற்கு இனி எதுவும் மிச்சமில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன், ஒரு ஒப்பந்தத்தை ஈரான் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது.“ என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். துபாய் விமான நிலையத்தை தாக்கிய ஈரான் இதனிடையே, ஈரானின் ஏவுகணை தாக்குதலில் துபாய் விமான நிலையம் மற்றும் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டல் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவர்களுக்கு ராணுவ தளங்களை கொடுத்து உதவும் அண்டை நாடுகளான அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று இரு தரப்பும் பயங்கர மிரட்டல்களை விடுத்த நிலையில், ஈரனின் மிகப் பெரிய பாலத்தை கூட்டுப்படைகள் தாக்கி அழித்துள்ளன. அதே நேரத்தில், உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக விளங்கும் துபாய் விமான நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், விமான நிலையத்தின் ஒரு முனையம் சேதமடைந்துள்ளதாக துபாய் ஊடகப் பிரிவு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையத்தை தாக்க வந்த ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டபோது, அதன் எஞ்சிய பாகங்கள் விழுந்து, ஜெபல் அலி துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஜுமேரோ கடற்கரைக்கு அருகே உள்ள ஒரு செயற்கை தீவில் அமைந்திருக்கும், துபாயின் முக்கிய அடையாளமாக கிழும் புர்ஜ் அல் அரப் ஹோட்டலும், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஈரானின் தாக்குதல் காரணமாக, துபாய் மற்றும் அபுதாபி உட்பட அந்த பிராந்தியம் முழுவதும், ஐக்கிய அரபு அமீரக விமான நிறுவனங்கள் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!
சினிமா

நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், நவீன் சந்திரா நடிப்பில், சோமிதரன் இயக்கத்தில் வெளியான ஈழத் தமிழ்ப் படம் நீளிராவின் விகடன் விமர்சனம். \ A review of the Eelam Tamil film Neelira, produced by Karthik Subbaraj, starring Naveen Chandra and directed by SomEETharan. இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
வெள்ளியங்கிரியில் சோகம்: சிவ தரிசனப் பயணம் உயிரிழப்பில் முடிவு...
சினிமா

வெள்ளியங்கிரியில் சோகம்: சிவ தரிசனப் பயணம் உயிரிழப்பில் முடிவு...

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை பகுதியில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷின் மகன் முகேஷ் குமார் (23), கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். தெலுங்குபாளையம் பகுதியில் வாடகை வீடில் தங்கி கல்வி பயின்று வந்த அவர், தனது நண்பர்களுடன் ஆன்மீக நோக்கில் வெள்ளியங்கிரி மலை ஏறும் பயணத்தை நேற்று இரவு தொடங்கினார். மலையேற்றத்தில் திடீர் நெஞ்சு வலி சுமார் 10 மணியளவில் அபி, மகேந்திரன் உள்ளிட்ட எட்டு நண்பர்களுடன் மலையேற்றம் தொடங்கிய முகேஷ் குமார், இன்று அதிகாலை 2 மணியளவில் ஐந்தாவது மலைப்பகுதியை எட்டியபோது திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். சில நிமிடங்களில் அவர் மயங்கி கீழே விழுந்த நிலையில், அருகில் இருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடி மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தால், அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, டோலி தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் மாணவரின் உடலை மலைப்பாதையில் இருந்து கீழிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துயரச் சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்! காங்கிரஸ் பட்டியல் எப்போது?
சினிமா

வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்! காங்கிரஸ் பட்டியல் எப்போது?

தொண்டர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படும் சத்தியமூர்த்தி பவன்... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்