தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து தினமலர் மற்றும் சாணக்யா அமைப்பு இணைந்து நடத்திய பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? மிக முக்கிய கேள்வியான 'இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்?' என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில்கள்; அ.தி.மு.க: 40% தி.மு.க: 37% தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க): 18% நாம் தமிழர் (நா.த.க): 5% தி.மு.க அரசு வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியதாக 11% பேரும், ஓரளவு செய்துள்ளதாக 67% பேரும், ஒன்றுமே செய்யவில்லை என 22% பேரும் தெரிவித்துள்ளனர். தி.மு.க அரசுக்கு 10-க்கு 10 மதிப்பெண்களை 15% பேரும், பூஜ்ஜியம் மதிப்பெண்ணை 26% பேரும், பாதி மதிப்பெண்களை 59% பேரும் வழங்கியுள்ளனர். தி.மு.க ஆட்சியில் ஊழல் மிகவும் அதிகம் என 54% பேர் கருதுகின்றனர். தி.முக. பிரமுகர்கள் மீதான இ.டி, சிபிஐ சோதனைகள் சரியானதுதான் என 44% பேர் தெரிவித்துள்ளனர். சிறந்த எதிர்க்கட்சியாக அதிமுக (54%), தவெக (18%), நாதக (17%). சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி (64%), விஜய் (18%), சீமான் (18%). விஜய்யின் அரசியல் செயல்பாடு 'பரவாயில்லை' என 46% பேரும், 'சூப்பர்' என 19% பேரும், 'மோசம்' என 35% பேரும் கூறியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு மோசம் என 37% பேரும், பரவாயில்லை என 40% பேரும் கருதுகின்றனர். துணை முதல்வர் உதயநிதியின் செயல்பாடு மோசம் என 45% பேர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசம் என 59% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் செயல்பாடு சூப்பர் என 35% பேரும், பரவாயில்லை என 45% பேரும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கவில்லை என 40% பேரும், ஆம் என 27% பேரும் கருதுகின்றனர். ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களை மோடி அரசு கையாளும் விதம் சூப்பர் என 36% பேர் பாராட்டியுள்ளனர். இந்த தேர்தலில் ஊழல் (41%) மற்றும் மத்திய அரசின் அணுகுமுறை (16%) ஆகியவை முக்கிய பிரச்னைகளாக பார்க்கப்படுகின்றன.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



