மதுராவில் யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மதுராவில் யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். இந்த நிலையில், ரயில் செல்லும் பகுதிகளில் ரயில்வே தண்டவாள சந்திப்புகளில் கதவுகளை மூடும் வசதி உள்ளது. இதனால் விபத்துகளின் அபாயம் குறைவதோடு, சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. ரயில் போக்குவரத்தில் துல்லியமான நேரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தெற்கு ரயில்வே பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை விரைவாக செயல்படுத்தி வருகிறது. ரயில்கள் இடையூறு இல்லாமல் ஒரே வேகத்தில் இயங்கவும், நிலையங்களை திட்டமிட்ட நேரத்தில் அடையவும் உதவும் நவீன சிக்னல் அமைப்புகள் பல முக்கிய பாதைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய சிக்னல் தொழில்நுட்பத்தின் மூலம், ரயில் ஓட்டுநர்களுக்கு அடுத்தடுத்த பாதைகளின் நிலைமைகள் முன்கூட்டியே தெரியும் வகையில் அமைப்பு செயல்படுகிறது. குறிப்பாக, தண்டவாள சந்திப்புகளில் இருக்கும் சிக்னல்களின் நிலையை நேரடியாகக் காட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ஓட்டுநர்கள் வேகத்தை சரியாக கட்டுப்படுத்த முடிகிறது. இதன் மூலம் தாமதங்கள் குறையும் என்பதுடன், இயக்கத் திறனும் அதிகரிக்கிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் தெற்கு ரயில்வே முக்கிய முன்னேற்றத்தை சாதித்துள்ளது. ரயில்வே கடவுப்பாதைகளில் கணினி சார்ந்த ‘இன்டர்லாக்’ முறை திட்டமிடப்பட்ட அளவைத் தாண்டி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதலில் 12 இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்ட இந்த வசதி, தற்போது 15 இடங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு இணையாக, அவசரநிலைச் சூழ்நிலைகளைக் கையாள தேவையான உபகரணங்கள் 19 முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்த இன்டர்லாக் முறைமையின் முக்கிய அம்சமாக, மனித தலையீடு இல்லாமல் தண்டவாளத்தை அணுகும் ரயில்களை தானாக கண்டறிந்து, Railway Level Crossing கதவுகளை மூடும் வசதி உள்ளது. இதனால் விபத்துகளின் அபாயம் குறைவதோடு, சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், ‘ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங்’ எனப்படும் மேம்பட்ட சிக்னல் அமைப்பும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 73.7 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வசதியை நிறுவ திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 70.5 கிலோமீட்டர் தூரத்தில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இயற்கை சூழல் காரணிகளையும் கருத்தில் கொண்டு, பாம்பன் பாலத்தில் காற்றின் வேகத்தை கண்காணிக்கும் தானியங்கி சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அதிக காற்றழுத்தம் பதிவானால், ரயில்களின் இயக்கம் தானாக கட்டுப்படுத்தப்படும் வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

சிறையில் அடைக்கப்பட்ட மலையாள இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறித்து... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

World Test Championship 2027: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் (3 சொந்த மண்ணிலும், 3 வெளிநாட்டிலும்) விளையாடும். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.