நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >Raghuvanshi: ரகுவன்ஷி சர்ச்சை அவுட்! கொல்கத்தா - லக்னோ போட்டியில் நடந்தது என்ன?
🏏 விளையாட்டு

Raghuvanshi: ரகுவன்ஷி சர்ச்சை அவுட்! கொல்கத்தா - லக்னோ போட்டியில் நடந்தது என்ன?

ஞாயிறு, ஏப்ரல் ௨௬, ௨௦௨௬|13 மணி நேரம் முன்|சுகுமாறன்|Abp News
Raghuvanshi: ரகுவன்ஷி சர்ச்சை அவுட்! கொல்கத்தா - லக்னோ போட்டியில் நடந்தது என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த 38வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. கொல்கத்தா - லக்னோ: இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீசியது. ஆட்டத்தை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு டிம் செஃபெர்ட் டக் அவுட்டாக, கேப்டன் ரஹானே 15 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது, ரகுவன்ஷி - கீரினுடன் ஜோடி சேர்ந்தார். கொல்கத்தா அணிக்காக இந்த தொடரில் அதிக ரன் அடித்த வீரர் ரகுவன்ஷியே ஆவார். அவர் 7 போட்டிகளில் 200 ரன்களை எடுத்துள்ளார். ரகுவன்ஷி சர்ச்சை அவுட்: புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் கொல்கத்தா இருந்தாலும் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர் ரகுவன்ஷி. அவர் 8 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தபோது பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தில் ஒரு ரன் எடுத்து ஓட முயற்சித்தார். அப்போது, அங்கே நின்று கொண்டிருந்த ஃபீல்டர் பந்தை தடுத்து அவரை ரன் அவுட்டாக்க முயற்சித்தார். ஆனால், மீண்டும் கிரீசை நோக்கி ஓடிய ரகுவன்ஷி மீது பந்து பட்டு விட்டது. இதனால், அவரை ரன் அவுட்டாக்கும் லக்னோவின் முயற்சி தடைபட்டது. ஆனால், லக்னோ அணி ரன் அவுட் முயற்சியை அவர் தடுத்ததாக விதிப்படி அவரை அவுட் என்று அறிவிக்க வேண்டும் என்று நடுவரிடம் முறையிட்டனர். இதையடுத்து, 3வது அம்பயர் இதை பரிசோதித்தார். அப்போது, ரகுவன்ஷி பந்தை தடுக்கும் நோக்கத்தில் கிரீசுக்கு திரும்பும்போது எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்பது தெரிந்தது. கடும் விமர்சனம்: ஆனாலும், ஐசிசி விதி 37ன் படி ரகுவன்ஷி அவுட் என்று 3வது அம்பயர் அறிவித்தார். இதனால், ரகுவன்ஷி, கொல்கத்தா அணி மற்றும் கொல்கத்தா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர், அவர் நடுவரிடம் விளக்கம் அளித்தும் அவரை பெவிலியனுக்கு அனுப்பினர். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வீரர் ரன் எடுக்க ஓடி எடுக்க முடியாத பட்சத்தில் மீண்டும் கிரீசுக்கு திரும்பும்போது வேறு எப்படி திரும்ப முடியும்? என்று ரகுவன்ஷிக்கு ஆதரவாக கேள்வி எழுப்பி வருவதுடன், ரிஷப்பண்ட் மற்றும் லக்னோ அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள லக்னோ அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 புள்ளிகளுடன் உள்ளது. கடைசி இடத்தில் உள்ள கொல்கத்தா 7 போட்டிகளில் 1 வெற்றி 1 முடிவில்லை 5 தோல்விகளுடன் 3 புள்ளிகளுடன் உள்ளது. IPL 2026: பாதி ஐபிஎல் ஓவர் - கட்டுக்கடங்காத பஞ்சாப், பரிதாபத்தில் கொல்கத்தா - புள்ளிப்பட்டியல் நிலவரம்

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

பாக்கம் ஏரியில் மீன்பிடி திருவிழா: 20 கிராம மக்கள் பங்கேற்பு
விளையாட்டு

பாக்கம் ஏரியில் மீன்பிடி திருவிழா: 20 கிராம மக்கள் பங்கேற்பு

செஞ்சி: செஞ்சி அடுத்த பாக்கம் ஏரியில் நடந்த மீன்பிடி திருவிழாவில் 20 கிராம மக்கள் ஒன்றாக திரண்டு மீன் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
விழுப்புரம் மாவட்ட அரசு நீச்சல் குளத்தில் பயிற்சி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
விளையாட்டு

விழுப்புரம் மாவட்ட அரசு நீச்சல் குளத்தில் பயிற்சி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு நீச்சல் குளத்தில் துவக்கப்பட்டுள்ள, கோடை கால பயிற்சி வகுப்பில் மாணவ, இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
விளையாட்டு

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். | Sanju Samson, the opening batsman for the Chennai Super Kings, has set a new record in the IPL series. இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்