MK Stalin: கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்? | தமிழ் செய்தி - TamilSeithi.com
MK Stalin: கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
|16 மணி நேரம் முன்|ராஜேஷ். எஸ்|Abp News
செந்தில் பாலாஜி இருப்பதால் கரூரை பற்றி தனக்கு கவலையில்லை என்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காலையில் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கரூர் ராயனூரில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசும்போது, திமுகவின் திட்டங்கள், சாதனைகள், திமுகவின் வெற்றி குறித்தும் சிலாகித்து பேசியுள்ளார். சாதிக்க நாங்கள் ரெடி ”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறது; சாதிக்க நாங்கள் ரெடி. 10 ஆண்டுகாலமாக உரிமைகளை அடகுவைத்த அதிமுக ஆட்சியை நாம் அகற்றி 2021இல் ஆட்சி அமைத்தோம்; எந்தவொரு மாநில அரசும் இந்தளவு சாதனை செய்ய முடியாது என சொல்லும் அளவுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து செய்து காட்டினோம். கரூரை பற்றி கவலையில்லை செந்தில் பாலாஜி இருப்பதால் கரூரை பற்றி எனக்கு கவலையில்லை; செந்தில் பாலாஜி யின் புகுந்த வீடுதான் கோவை; பிறந்த ஊரான கரூரை மறக்கமாட்டார்; இந்த முறை கரூர், கோவை மட்டுமின்றி தமிழ்நாடே நம்வசம் தான். அதிமுகவின் அழிவு சக்தி பழனிசாமி அதிமுகவை நான் உடைக்க முயற்சித்ததாக அபாண்டமாக பேசுகிறார்; அதிமுகவின் அழிவு சக்தி பழனிசாமி. தலைமைப்பண்பு, அடக்கம் இல்லாமல், சொந்த கட்சியினரை துரத்திவிட்டு இப்படி வயிறெரிந்து பேசுகிறார். தடம் மாறி கூட்டணி வைத்துள்ள பழனிசாமி செய்துள்ள துரோகங்களை எண்ணிப் பாருங்கள். திராவிட இயக்க கொள்கையில் இருந்து அதிமுக விலகுவதால்தான் தாய் கழகமான திமுகவுக்கு திரும்புகிறார்கள். நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை எடப்பாடி பழனிசாமி அடகுவைத்தார். திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை மொத்த அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி சசிகலா வரை துரோகம் செய்து முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
Jana Nayagan: Reports have emerged that 'Jana nayagan'—the highly anticipated film starring actor and Tamilaga Vettri Kazhagam leader Vijay—is set to be released soon. Having faced censorship and legal hurdles over the past few months, the film is now expected to hit theaters during the last week of April. Specifically, April 24 or April 30 are being cited as the probable release dates. This news
இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக ஏப்ரல் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு: ஏப்ரல் 9, 2026 வாக்கு எண்ணிக்கை: மே 4, 2026 பள்ளி விடுமுறை: ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 10 வரை தேர்தல் தேதி நெருங்கி வருவதால், புதுச்சேரியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் தங்களது கூட்டணிக் வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நிதின் நபின் (பாஜக): பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் வரும் ஏப்ரல் 4-ம் தேதி காரைக்காலில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி புதுச்சேரியிலும் வாக்கு சேகரிக்க உள்ளார். அமித் ஷா (பாஜக): மத்திய அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 6-ம் தேதி திருக்கனூரில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உரையாற்றுகிறார். மு.க. ஸ்டாலின் (திமுக): தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தட்டஞ்சாவடியில் பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட உள்ளார். வாக்குப்பதிவிற்கான மின்னணு இயந்திரங்களைச் சரிபார்த்தல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால், புதுச்சேரி தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார், காளிபாளையம் தர்மராஜா கோவிலில் சாமி தரிசனம்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.