Trump Iran War: அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தாக்கப்பட்ட நிலையில், போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்தத்தை நிராகரித்த ஈரான் அமெரிக்காவின் F-15 மற்றும் A-10 ஆகிய இரண்டு போர் விமானங்களை நேற்று அடுத்தடுத்து வெற்றிகரமாக ஈரான் தாக்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் தப்பித்த இருவரில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடும் பணியில் ஈடுபட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும் தாக்குதலுக்கி ஆளாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா முன்வைத்த 48 மணி நேர போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்த பிறகே, தாக்குதல்கள் தீவிரமடைந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், உரிய இழப்பீடுகள் பெறாமல் போரை நிறுத்தப்போவதில்லை என்ற முடிவில் ஈரான் விடாப்படியாக இருப்பதை உணர முடிகிறது. கடந்த புதன்கிழமை அன்று பெயர் வெளியாகாத குறிப்பிட்ட நாட்டின் மூலம், இடைக்கால போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை அமெரிக்கா வழங்கியதாம்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



