நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு
🎬 சினிமா

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

செவ்வாய், ஏப்ரல் ௧௪, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|தினத்தந்தி
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு நிகழச்சி நடந்தது. | An Equality Day Pledge Ceremony was held at the Nellai Municipal Police Commissioner's Office under the leadership of Police Commissioner Deshmukh Shekhar Sanjay.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

2 கேஸ் சிலிண்டர் கனெக்‌ஷன் இருக்கா? சிலிண்டர் டிரான்ஸ்பர் எப்படி தெரியுமா? இதுதான் ரொம்ப முக்கியம்
சினிமா

2 கேஸ் சிலிண்டர் கனெக்‌ஷன் இருக்கா? சிலிண்டர் டிரான்ஸ்பர் எப்படி தெரியுமா? இதுதான் ரொம்ப முக்கியம்

Have 2 LPG Connections? Don't Transfer Your Gas Connection Before Reading This

17 மணி நேரம் முன்
முத்தமிட்ட மோசம் என்ன உண்டாகும்? ஒரு பெண் தன் காதலை சொல்லும் உச்சக்கட்டம்: தனுஷ் அப்பா பாட்டுக்கு யுகபாரதி விளக்கம்
சினிமா

முத்தமிட்ட மோசம் என்ன உண்டாகும்? ஒரு பெண் தன் காதலை சொல்லும் உச்சக்கட்டம்: தனுஷ் அப்பா பாட்டுக்கு யுகபாரதி விளக்கம்

காதலின் ஆழத்தை இதை விட ஆழமாக சொன்ன பாடல் வேறு எதுவும் இல்லை என்று தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா எழுதிய பாடலை கவிஞர் யுகபாரதி கூறியுள்ளார். இந்த பாடல் காலம் கடந்தாலும் இன்றைக்கும் ஒரு சூப்பர் ஹிட் பாடலாக நிலைத்திருக்கிறது. ராஜ்கிரன் நாயகனாக நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கஸ்தூரி ராஜா. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர், 1994-ம் ஆண்டு தாய் மனசு என்ற படத்தை இயக்கியிருந்தார். சரவணன், பப்ளு ப்ரித்விராஜ், விஜயகுமார், மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் அனைத்து பாடல்களையும் கஸ்தூரி ராஜாவே எழுத, இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் வரும் தூதுவளை இலை அரச்சி என்ற பாடல், இன்றைக்கும் கிராமத்து பேருந்துகளில் ஒலிக்கும் முக்கிய பாடலாக இருக்கிறது. இது குறித்து பேசியுள்ள கவிஞர் யுகபாரதி, இந்த பாடலில் ஐயா கஸ்தூரி ராஜா எவ்வளவு காதலோடு இருக்கிறார்? இருந்தார் இருக்க போகிறார் என்பதை அந்த பாடலின் சரணத்தில் காட்டிருப்பார். அந்த பாடலை கேட்டால் உங்களுக்கு தெரியும். ஊர் தூங்கும் வேளையிலும் நான் தூங்கவில்லை, யார் பேச்சை கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் உன் பேச்சுதான் என்று எழுதி இருப்பார். இதை நானே கூட எழுதிவிடுவேன். அடுத்து எத்தனை நினைப்பு என்மேல் இருக்கு எட்டிப்போகலமா? கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும் முன்னே ஒட்டிக்கொள்ளலாமா என்று எழுதி இருப்பார், இதை முத்துக்குமார் ரேஞ்சுக்கு யோசித்தாலே எழுதிவிடலாம். ஆனால் அடுத்த வரி எழுதியிருப்பார். முத்தமிட்டா மோசம் என்ன உண்டாகும், என்று எழுதிவிட்டு கடைசி வரியாக சத்தமிட்டா உன் நிலைமை என்னாகும் எனறு முடிப்பார். View this post on Instagram A post shared by Cinema Vikatan (@cinemavikatan) சத்தமிட்டா உன் நிலைமை என்னாகும் என்பது தான் தமிழ் மரபில் உள்ள, பெண் தன் காதலை சொல்லும் உச்சபட்சமான இடம். ஊரார் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று இருக்கிறதே இதுதான் ஒரு மரபார்ந்த சிந்தனை. அந்த மரபோடு பாடல்கள் எழுதி தமிழ் சினிமாவுக்கு வளம் சேர்த்த கவிஞர்களில் ஐயா கஸ்தூரி ராஜாவும் ஒருவர் என்றுளு யுகபாரதி கூறியுள்ளார்.

17 மணி நேரம் முன்
TN Election: ஊட்டியில் மீண்டும் கைகட்ட விரும்பாத விஜய் - ரீல் அப்பாக்கள் அட்டாக் - 13 மார்க் போதுமா? என கேள்வி
சினிமா

TN Election: ஊட்டியில் மீண்டும் கைகட்ட விரும்பாத விஜய் - ரீல் அப்பாக்கள் அட்டாக் - 13 மார்க் போதுமா? என கேள்வி

TN Election 2026: கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 13 சதவிகிதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக, பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா விமர்சித்துள்ளார். பெரம்பூரில் தீவிர பரப்புரை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்களின் கள பரப்புரை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திலகபாமாவிற்கு ஆதரவாக பாஜக நிர்வாகி சரத்குமார் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது வீதிவீதியாக வாகனத்தில் நின்றபடி சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தலைவர் விஜயை கடுமையாக சாடியதோடு, ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது தொடர்பாகவும் பதிலளித்தார். ”விஜய் செய்தது மோசமான செயல்” கரூர் சம்பவம் தொடர்பாக பேசுகையில், ”நாங்கள் 1996 முதல் மக்களைச் சந்தித்து வருகிறோம். ஒரு அசம்பாவிதம் கூட நடந்ததில்லை. ஆனால், விஜய்யின் கூட்டத்தில் 41 பேர் இறந்ததற்கு, அவர்களின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்துத் துக்கம் விசாரிப்பார்களா? இதைவிட ஈனமான செயல் இருக்குமா? துக்க வீட்டிற்கு வந்த இடத்தில் செல்பி எடுக்கக்கூடாது என்று ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாதவரா எதிர்காலத் தலைவர்? இலவசத்தை எதிர்ப்பேன் என்று சொன்னவர், இப்போது கார், பைக் கொடுப்பேன் என்கிறார். 10 லட்சம் கோடி கடனைச் சீர் செய்ய இவரிடம் என்ன திட்டம் இருக்கிறது? என சரத்குமார் கேள்வி எழுப்பினார். ஊட்டியை விரும்பாத விஜய் - சரத்குமார் ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது தொடர்பான கேள்விக்கு, “இந்த விவகாரத்தில் பாஜகவைச் சம்பந்தப்படுத்துவது அபத்தமானது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பாளர் வசமே இருக்கும்போது, இதில் எப்படி எல்.முருகனுக்கு தொடர்பு இருக்கும்? இது தேவையில்லாமல் அரசியல் ஆக்கப்படுகிறது. எங்களது படத்திற்கும் இதே நிலை வந்தபோது சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொன்னோம், அதுதான் முறை” என சரத்குமார் பதிலளித்தார். மேலும், விஜய் ஏன் அதிமுகவை விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு, ”தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வெல்வார் என்பது விஜய்க்குத் தெரியும். வம்பில் சிக்க வேண்டாம் என்பதற்காகப் பேசாமல் இருக்கலாம். மீண்டும் ஊட்டியில் கைகட்டி நிற்க வேண்டிய நிலை வந்துவிடக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் போல” என சரத்குமார் விமர்சித்துள்ளார். விஜயின் அரசியல் பணிகளை சினிமாவில் அவருக்கு அப்பாவாக நடித்த சத்யராஜ் ஏற்கனவே மறைமுகமாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், வாரிசு திரைப்படத்தில் விஜய் க்கு அப்பாவாக நடித்த சரத்குமாரும் இப்போது தவெக தலைவரை கடுமையாக சாடியுள்ளார். அரசுக்கு 13 மார்க் போதுமா? இதையடுத்து பரப்புரையின் போது பேசிய திலகபாமா, “2021ம் ஆண்டில் திமுகவிடம் ஆட்சியை கொண்டுபோய் கொடுத்துவிட்டோம். எப்படியோ அவர்கள் ஜெயித்து வந்துவிட்டார்கள். வந்தவர்கள் 505 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் 13 சதவிகிதம் அதாவது வெறும் 63 வாக்குறுதிகளை மட்டுமே நிறை வேற்றியுள்ளனர். 13 மார்க் எடுத்தால் பாஸா? ஃ பெயிலா? ஃபெயிலான இந்த அரசாங்கம் நமக்கு வேண்டுமா? வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக செலவழித்து படிக்கிறோம். ஆனால் அரசு வேலைக்கு சென்றவர்கள் நிலை என்ன? செவிலியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம், எல்லாருமே போராடி தான் உரிமைகளை வாங்க வேண்டுமானால் அரசாங்கம் எதற்கு? இந்த பகுதியிலிருந்து இரண்டு முறை வென்று வந்த எம்.எல்.ஏ ., எதையும் செய்யவில்லை. ஆனால் இப்போது வந்து வாக்குறுதிகளை அடுக்குகிறார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடையை அடைக்க காவல்துறையை அணுகினேன் மூடினார்கள். கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தி கொடுத்து, 5 ஆண்டுகள் உங்களுக்காக பணியாற்றிட வாய்ப்பு தாருங்கள்” என பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா பேசி வாக்கு சேகரித்தார்.

17 மணி நேரம் முன்