”10,000 கையொப்பங்களுடன் மனு! அரசு பதில் கட்டாயம்” புதிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய்!
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
”10,000 கையொப்பங்களுடன் மனு! அரசு பதில் கட்டாயம்” புதிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய்!
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜன நாயகன் திரைப்படம், சென்சார் பிரச்னை காரணமாக ரிலீ்ஸ் ஆகாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படம் சட்டவிரோதமாக ஆன்லைனில் கசிந்தது. இதனால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக 7 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளாார். இதனால் சினிமாவில் இருந்து விலகியுள்ள அவர், ஜன நாயகன் திரைப்படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்தார். கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த இந்த படம் சென்சார் பிரச்னை காரணமாக வெளியாகாத நிலையில், தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜன நாயகன் திரைப்படத்தின் ஒரு காட்சி இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அன்றைய தினமே நள்ளிரவில் முழு படமும் ஆன்லைனில் கசிந்தது. இந்த விவாகரத்தில் தயாரிப்பாளர் சங்கம், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து சைபர் க்ரைம் விசாரணை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனது. இந்நிலையில், ஜன நாயகன் படம் கசிந்தது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார், இது தொடர்பாக இன்று 6 பேரைக் கைது செய்தனர். தணிக்கை வாரியத்தின் (CBFC) பல ஆட்சேபனைகளால் படத்தின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, ஜன நாயகன் திரைப்படம் சுமார் ரூ. 500 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் படத்தை கசியவிட்டதிலும், பகிர்ந்ததிலும் இந்த 6 பேருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏப்ரல் 10-ந் தேதி இப்படம் இணையதளத்தில் கசிந்ததை தொடர்ந்து இப்படத்தை தயாரித்த கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர், தமிழக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே படம் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப்படுவதையும், பகிரப்படுவதையும் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் கோரியிருந்தார். மேலும் படம் கசிந்தது தொடர்பான தங்கள் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய இந்தச் செயலில், சட்டவிரோதமாகப் படத்தை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது மற்றும் விநியோகிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக 21 பேரின் பெயர்களை தயாரிப்பு நிறுவனம் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தது. மேலும், இதில் தொடர்புடைய அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. கசிந்த திரைப்படத்தின் பதிப்பு சமூக வலைதளங்கள் மற்றும் பிற தளங்களில் பகிரப்படாமல் இருப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அருள் எம்.எல்.ஏ மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதனை ஒட்டி பகுதியில் சேலம் பள்ளப்பட்டி பகுதியில் இன்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ், ஜிகே மணி எம்எல்ஏ, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றி அருள் எம்எல்ஏவிற்கு மீண்டும் வெற்றி பெற பொதுமக்கள் உதவி புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் பின்னர், அவர் ஓமலூர் அருகே உள்ள முத்த நாயக்கன்பட்டியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச மேடையில் இருந்து புறப்பட்டார். அப்போது அவரை இரண்டு தொண்டர்கள் கை தாங்கலாக பிடித்து அழைத்துச் சென்றனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் டாக்டர் ராமதாஸ் மயங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது நிர்வாகிகளும் தொண்டர்களும் டாக்டர் ராமதாசை பார்க்க முந்தியடித்துக் கொண்டு கொண்டு முன்னால் வந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டது. அதில் ராமதாஸ் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். உடனே சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தல் பிரச்சாரம் நடந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Iran Accuses US of Seeking Impossible Demands After War/போரில் பெறமுடியாததை எல்லாம் அமெரிக்கா கேட்கிறது - ஈரான் விளக்கம் இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.