நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏛️ அரசியல்
  3. >Tamil Nadu Election 2026: மயிலாடுதுறை தேர்தல் 2026: 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு - கலெக்டர், எம்பி, எஸ்பி மற்றும் வேட்பாளர்கள் வாக்களிப்பு!
🏛️ அரசியல்

Tamil Nadu Election 2026: மயிலாடுதுறை தேர்தல் 2026: 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு - கலெக்டர், எம்பி, எஸ்பி மற்றும் வேட்பாளர்கள் வாக்களிப்பு!

வியாழன், ஏப்ரல் ௨௩, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|மயிலாடுதுறை, எஸ்.ஜெகநாதன்|Abp News
Tamil Nadu Election 2026: மயிலாடுதுறை தேர்தல் 2026: 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு - கலெக்டர், எம்பி, எஸ்பி மற்றும் வேட்பாளர்கள் வாக்களிப்பு!

மயிலாடுதுறை: தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் இன்று (23.04.2026) தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்காளர் விவரம் மற்றும் முன்னேற்பாடுகள் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 7,35,135 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,62,939 ஆண் வாக்காளர்களும், 3,72,149 பெண் வாக்காளர்களும், 47 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 951 வாக்குப்பதிவு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 54 வாக்குச்சாவடி மையங்கள் 'பதற்றமானவை' எனக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு தேர்தல் பணிகளுக்காக 1504 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), 1140 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (Control Units) மற்றும் 1235 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 216 மத்திய துணை ராணுவப் படையினர், வெளிமாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 256 ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 1668 போலீஸார் மாவட்டம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 4564 தேர்தல் பணியாளர்கள் வாக்குப்பதிவு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இயந்திரக் கோளாறால் சிறு தாமதம் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாவட்டத்தின் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பின்னர் தேர்தல் பொறியாளர்கள் மூலம் பழுதுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தடையின்றித் தொடர்ந்தது. முக்கியப் பிரமுகர்கள் வாக்குப்பதிவு மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீகாந்த், தருமபுரம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஎல்சி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா, வரதாச்சாரியார் பூங்கா அரசு தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த இவர், கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தனது வாக்கினை மயிலாடுதுறைக்கு மாற்றிக்கொண்டார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்" எனத் தன்னம்பிக்கை தெரிவித்தார். வேட்பாளர்கள் வாக்களிப்பு சீர்காழி: திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன், தனது சொந்த ஊரான பெருந்தோட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முதல் ஆளாக வந்து குடும்பத்துடன் வாக்களித்தார். அதேபோல், அதிமுக வேட்பாளர் சக்தி அவர்கள் தனது சொந்த ஊரான எருக்கூரில் வாக்கினைப் பதிவு செய்தார். பூம்புகார்: தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் விஜயாலயன், பொறையார் ஜமாலியா பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். வேட்பாளர்களின் நிலவரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 43 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மயிலாடுதுறை: 20 வேட்பாளர்கள் பூம்புகார்: 13 வேட்பாளர்கள் சீர்காழி: 10 வேட்பாளர்கள் காலை நேர வாக்குப்பதிவு நிலவரம் மாவட்டத்தில் காலை 9:00 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 16.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியான விவரம்: மயிலாடுதுறை: 15.94% சீர்காழி: 16.14% பூம்புகார்: 17.15% வெப்பம் அதிகரிக்கும் முன்பே வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகாலையிலேயே முதியவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் உற்சாகமாக வாக்குச்சாவடிகளில் திரண்டு வருகின்றனர். தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் வன்முறை: இரு தரப்பினர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் முர்ஷிதாபாத்தில் பதற்றம்
அரசியல்

மேற்கு வங்கத்தில் வன்முறை: இரு தரப்பினர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் முர்ஷிதாபாத்தில் பதற்றம்

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
மொத்தமாக அரண்டு போன நேட்டோ நாடுகள்.. நட்பு நாடுகளையே காலி செய்யும்.. டிரம்ப்பின் பயங்கர பிளான்
அரசியல்

மொத்தமாக அரண்டு போன நேட்டோ நாடுகள்.. நட்பு நாடுகளையே காலி செய்யும்.. டிரம்ப்பின் பயங்கர பிளான்

Trump's ‘Naughty and Nice' List: NATO Allies Put on Notice Over Iran War Support இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
இலங்கை தமிழர் முகாமை இடமாற்றம் செய்யக் கோரி 4 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
அரசியல்

இலங்கை தமிழர் முகாமை இடமாற்றம் செய்யக் கோரி 4 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட குளத்துள்வாய்பட்டி பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, நான்கு கிராம மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சுரைக்காய்பட்டி ஊராட்சியில் குளத்துள்வாய்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 45 வீடுகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகாமில் இருப்பவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு கிராம மக்களுக்கும் முகாம் மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்குச் செல்வதில் சிக்கல் நீடிப்பதாகவும், முகாம் அருகே போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அங்குப் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், முகாம் மக்கள் முன்பு தங்கியிருந்த பழைய ஷெட்களைத் தங்களது விவசாய விளைபொருட்களை உலர்த்தும் களமாகப் பயன்படுத்த வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. கடந்த 17-ம் தேதி விவசாயப் பாதையைச் சமன் செய்யும் பணியின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாகப் பதற்றம் அதிகரித்தது. "முகாமை இடமாற்றம் செய்தால் மட்டுமே வாக்களிப்போம்" என்பதில் கிராம மக்கள் உறுதியாக இருந்தனர். இன்று காலை 7 மணிக்குத் தேர்தல் தொடங்கிய நிலையில், குளத்துள்வாய்பட்டி, குமாரகிரி, சோத்து நாயக்கன்பட்டி, அம்மா மடம் ஆகிய 4 கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வாக்குச்சாவடியில் மொத்தம் 983 வாக்காளர்கள் இருந்தும், காலை 11 மணி நிலவரப்படி வெறும் 8 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். மக்கள் எவரும் வராததால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. "வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியமே இந்தப் பிரச்சினை இவ்வளவு பெரிதாகக் காரணம். முகாமை மாற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும்," என கிராம மக்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர். நாங்குநேரியிலும் தேர்தல் புறக்கணிப்பு: இதேபோல், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்திலும் தேர்தல் புறக்கணிப்பு அரங்கேறியது. அங்குள்ள 290-வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட 969 வாக்காளர்கள் ஒருவர்கூட வாக்களிக்க வரவில்லை. கடந்த மார்ச் 2-ம் தேதி நடந்த இரட்டை கொலை வழக்கில் இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்று கூறி அக்கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அந்த வாக்குச்சாவடியும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருவது அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. - க.சண்முகவடிவேல் இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்