நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >குப்பையில் எறியப்படும் மரக்கழிவுகள் இனி 'தங்கம்'... விஞ்ஞானிகளின் புதிய மின்-வேதியியல் புரட்சி!
💻 தொழில்நுட்பம்

குப்பையில் எறியப்படும் மரக்கழிவுகள் இனி 'தங்கம்'... விஞ்ஞானிகளின் புதிய மின்-வேதியியல் புரட்சி!

புதன், ஏப்ரல் ௮, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
குப்பையில் எறியப்படும் மரக்கழிவுகள் இனி 'தங்கம்'... விஞ்ஞானிகளின் புதிய மின்-வேதியியல் புரட்சி!

மரக்கட்டைகள் ஏன் இவ்வளவு உறுதியாக இருக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கு 'லிக்னின்' (Lignin) என்ற ஒரு கடினமான கரிமப் பொருள்தான் காரணம். மரத்தின் எடையில் 25% வரை இருக்கும் இந்த லிக்னின், இதுவரை தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் அல்லது தூக்கி எறியப்படும் ஒரு கழிவாகவே இருந்து வந்தது. காரணம், இதைப் பிரித்து எடுப்பது அவ்வளவு எளிதல்ல. இதுவரை லிக்னினை உடைக்க அதிக வெப்பமும், ராட்சத அழுத்தமும், புதைபடிவ எரிபொருட்களும் தேவைப்பட்டன. ஆனால், தென் கொரிய விஞ்ஞானிகள் இப்போது ஒரு 'அறிவியல் மேஜிக்' செய்துள்ளனர். எந்த எரிபொருளும் இல்லாமல், வெறும் மின்சாரத்தைப் (Electricity) பயன்படுத்தி லிக்னினை உடைக்கும் வித்தையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வின் வெற்றிக்குக் காரணம் Pd/C எனும் ஒரு சிறப்பு வினையூக்கி. இது டபுள் ஏஜென்ட் போல செயல்படுகிறது. லிக்னினின் இரும்பு போன்ற பிணைப்புகளை அணுஅணுவாக உடைக்கிறது. உடைந்த துண்டுகளை பயனுள்ள எரிபொருட்களாகவும் (Cyclohexanol), வேதிப்பொருட்களாகவும் மாற்றுகிறது. இதில் அதிசயம் என்னவென்றால், இதற்குத் தேவையான ஹைட்ரஜனை வெளியிலிருந்து வாங்காமல், நீரிலிருந்து மின்சாரத்தின் மூலம் வினையூக்கியின் மேற்பரப்பிலேயே விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். மிகக் கடினமான பிணைப்புகளைக் கூட வெறும் 90 நிமிடங்களில் இந்தத் தொழில்நுட்பம் சிதைத்துவிட்டது. சில பிணைப்புகள் வெறும் 30°C (சாதாரண அறை வெப்பநிலை) அளவிலேயே முழுமையாக உடைந்தன. இந்தத் தொழில்நுட்பத்தைச் சுத்தமாக 5 முறை பயன்படுத்தினாலும் அதன் வீரியம் குறையவில்லை. வெறும் சோதனை குழாயோடு நிறுத்தாமல் பிர்ச் வகை மரக்கட்டைகளில் விஞ்ஞானிகள் இதனை சோதித்தனர். ஆரம்பத்தில் 5% மட்டுமே வெற்றி கிடைத்த நிலையில், சில மாற்றங்களுக்குப் பிறகு அது 19.6% ஆக உயர்ந்தது. அதாவது, மரக்கழிவுகளில் இருந்து 20% உயர்தர வேதிப்பொருட்களை இப்போது எடுக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்பு வெறும் அறிவியல் மட்டுமல்ல; இது பொருளாதாரப் புரட்சி. பெட்ரோலியப் பொருட்களுக்குப் பதிலாக, மரக்கழிவுகளில் இருந்து தூய்மையான முறையில் எரிபொருட்களையும், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்களையும் தயாரிக்க இது வழிவகுக்கும். குப்பையாகப் போன மரம், இனி மின்சாரத்தின் உதவியால் 'மலிவான மூலப்பொருளாக' மாறப்போகிறது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

விழுப்புரத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.69.78 லட்சம் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் பறக்கும் படைகள் மூலம் இதுவரை ரூ.69.78 லட்சம் பறிமுதல் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
விழுப்புரம் தொகுதி தேர்தல் அலுவலகம்: லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
தொழில்நுட்பம்

விழுப்புரம் தொகுதி தேர்தல் அலுவலகம்: லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க., தேர்தல் அலுவகத்தை லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
செல்போனில் பவர் பட்டன் ஏன் வலது பக்கம் மட்டுமே இருக்கு..? என்ன காரணம் தெரியுமா?
தொழில்நுட்பம்

செல்போனில் பவர் பட்டன் ஏன் வலது பக்கம் மட்டுமே இருக்கு..? என்ன காரணம் தெரியுமா?

சில போன்களில் இந்தப் பட்டன் மேலே அல்லது பின்புறம் இருந்தது. காலம் போகப் போக, எல்லா போன்களிலும் இது எப்படி வலது பக்கத்துக்கு வந்தது? இதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது என தெரிந்துகொள்ளலாம். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்