முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் கைதொலைபேசியினை பறித்த கொள்ளையன் கைது!
முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் கடந்த 09.04.21 அன்று பெறுமதியான தொலைபேசியில் பேசியவாறு வீதியால் சென்ற பெண் ஒருவரிடம் இருந்து தொலைபேசியினை கொள்ளையடித்து சென்றுள்ளமை தொடர்பில் அன்று முள்ளியவளை பொலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
இன்னிலையில் முள்ளியவளை பொலீசார் குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்ற இடத்தின் வீதிகளில் உள்ள சி.சி.ரி.வி கமாரங்களை பரிசோதனை செய்து கொள்ளையனை இனம் கண்டுகொண்டுள்ளார்கள்.
குறித்த சம்பபவத்துடன் தொடர்புடைய கொள்ளையன் 10.04.21 அன்று முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு;ள்ளார்.
இந்த கொள்ளைசம்பபத்துடன் தொடர்புடைய நபர் முள்ளியவளை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே பல கொள்ளைச்சம்பவங்களுடன் கைதாகி பிணையில் விடுதலையானவர் என பொலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
10.04.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வாசல் தலத்தில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.