இந்திய தமிழ் தனியார் தொலைகாட்சியில் பாடல் போட்டியில் பங்கேற்றுள்ள மலையக சிறுமி அசானிக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் புதிய நிரந்தர வீடு ஒன்றினை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளார்.
வானொலி மூலம் பாடல் கேட்டு பாடி தேர்ச்சி பெற்ற அசானி தமிழ்நாட்டில் பாடல் போட்டியில் வெற்றி பெற்றால் தான் வீடு பரிசு என்பதே போட்டி விதிமுறை. ஆனால் நிரந்தர வீடில்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய அசானிக்கு அவரின் திறமைக்கு முதல் பரிசாக நிரந்தர வீட்டை கட்டிக் கொடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஸ்தாபகரின் செயலை கண்டு சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பாராட்டுகளை குவித்தவண்ணம் உள்ளனர்.