கள்ளக்காதலனுடன் வீடியோ கால் கதைத்துக்கொண்டிருந்த மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்.!

0
142

குடியாத்தம் அருகே இரவு நேரத்தில் கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி சேகர் (வயது 41). இவருடைய மனைவி ரேவதி (35). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

அதில் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகி கணவருடன் வாழ்ந்து வருகின்றனர். மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறாள். சேகரின் மனைவி ரேவதி வீட்டு வேலை செய்து சம்பாதித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சேகரின் மனைவி ரேவதி சில மாதங்களுக்கு முன் வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததைக் கண்ட சேகர் மனைவியை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் ரேவதி பல நேரங்களில் செல்போன் மூலம் பேசுவதும், சமூக வலைதளங்களில் கள்ளக்காதலனை பார்த்து வந்ததும் சேகருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சேகருக்கும், ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய முன் தினம் இரவு ரேவதி கள்ளக்காதலனுடன் செல்போனில் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்ட சேகர் ரேவதியிடம் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு ரேவதி சரியான முறையில் பதில் சொல்லாததால் ரேவதிக்கும், சேகருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

பின்னர் வாய் தகறாரு முற்றவே ஆத்திரம் அடைந்த கணவர் சேகர் அருகே இருந்த கத்தியை எடுத்து செல்போன் வைத்து வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த வலது கையை வெட்டியுள்ளார்.

இதில் மனைவி ரேவதியின் கை துண்டாகியது. வலியால் துடித்த ரேவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ரேவதியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கத்தியுடன் சேகர் குடியாத்தம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

அங்கு சேகர் அளித்த வாக்குமூலத்தில், மனைவி கள்ளக்காதலை தட்டி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து மனைவியின் கையை கத்தியால் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

உடனடியாக வழக்கு பதிவு செய்த குடியாத்தம் காவல் துறையினர் சேகரை சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியின் கையை துண்டாக வெட்டிய கணவனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here