முல்லைத்தீவில் கடலில் மூழ்கிய யாழ் இளைஞனை காணவில்லை.. ஒருவர் உயிருடன் மீட்ப்பு.!

0
159

முல்லைதீவு – நாயாற்று பகுதியில் கடலில் குளித்தவர்களில் ஒருவர் மாயம், ஒருவர் உயிருடன் மீட்கப்படுள்ளார்,

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..

முல்லைத்தீவு நாயாரறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் இன்று 28-04-24 மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள்.

இதன்போது ஒரு இளைஞனை கடலில் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.

நாயாறு கடற் படையினரின் உதவியுடன் ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞன் நாயாறு கடலில் மூழ்கிய நிலையில் அவனைத் தேடு நடவடிக்கை இன்று மாலை வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீட்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 40 அகவை உடைய நபரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளதுடன் நீரில் மூழ்கி மீட்கப்பட்ட நபர் திருகோணமலை சேர்ந்தவர் இவர் முலத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடு நடவடிக்கையில் கடப்படையினர் மற்றும் பிரதேச இளைஞர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.

யாழில் திடீர் காய்ச்சல் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது சிறுமி.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here