புதுக்குடியிருப்பில் இருந்து CTB பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு கசிப்பு கடத்திய இருவர் கைது.!

0
98

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் பேருந்து மறித்து சோதனை விடப்பட்டது.

இதன்போது 45 லிட்டர் கசிப்புடன் சந்தேக நபர் இருவரை கைது செய்ய முற்பட்ட போது ஒருவர் தப்பிச் செற்றுள்ளார்.

பொலிசார் அவரையும் துரத்தி பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் பயண பொதியில் கசிப்பினை பொதி செய்து எடுத்துச் சென்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் விசுவமடு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லவிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here