முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு ஆளுகைக்கு உட்பட்ட காணிகளை துப்பரவு செய்யுமாறு பிரதேச சபை தவிசாளர் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் பற்றைக் காடுகள் காணப்படும் காணிகளுக்கு முன்னால் அறிவித்தல் துண்டுப்பிரசுரங்களை ஒட்டும் நடவடிக்கையில் பிரதேச சபை ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளார்கள்
அறிவித்தலில் பற்றைக்காடுகள் ஆக இருக்கும் காணிகளின் உரிமையாளர்கள் உடனடியாக காணிகளை துப்பரவு செய்யுமாறும் துப்பரவு செய்யத் தவறும் பட்சத்தில் காணியானது பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்படுத்த பட்டு தங்கள் மேல் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.