இலங்கையில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அடையாளம்!

0
131

இலங்கையில், மேலும் மூன்று ​ஒமிக்ரான் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார ​அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூவரில் ஒருவர் தான்சானியா நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்ற இருவர் சூடான் நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

33, 35 மற்றும் 47 வயதுடைய குறித்த மூவரும் இம்மாதம் 16 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்கனவே, 4 பேர் ஒமைக்ரொன் கொவிட் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாட்டில் ஒமிக்ரோனோன் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here