இலங்கையில் 14 வயது பாடசாலை மாணவிக்கு உறவினர்களால் நடந்த கொடுமை; சிறுமி பரிதாப மரணம்!!

0
1188

இலங்கையில் கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தா.க்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சித்தப்பா நேற்று (21) அவரை தா.க்கியுள்ளார்.

பின்னர் நேற்று காலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பிய போது, ​​சிறுமியின் தந்தை மீண்டும் சிறுமியை தா.க்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் மயக்கமடைந்த சிறுமியை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளையில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய நிபுனி நுவந்திகா பண்டார என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.adaderana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here