முல்லைத்தீவில் கடமையாற்றும் யாழ் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; பாடம் புகட்டிய பெற்றோர்!!

0
1071

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 24 வயது ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் 24.12.21 அன்று இடம்பெற்றுள்ளது, பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் தூஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற் பெற்றோர்களால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து 24.12.21 அன்று முல்லைத்தீவு பொலீசாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்,

கைது செய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது வரை எதிர்வரும் 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் வவுனியா சிறையில் தடுத்துவைப்பதற்காக சிறைச்சாலைகள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அது தொடர்பில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிள்ளைகளின் பாதுகாவலர்கள் சிறுவர்கள் தொடர்பில் சரியான அக்கறையுடன் செயற்படுமாறு வேண்டுகின்றோம்.

பல வன்முறை சம்பவங்கள் வெளிப்படுத்த முடியாமல் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் நன்மதிப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அடையாளப்படுத்தலை தவிர்த்துள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here