கனடாவில் யாழ்ப்பாணத்தை பூர்விக இடமாக கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் கொ.லை செய்யப்பட்டுள்ளார்.
கனடா – ஸ்காபரோவில் குகதாசன் மகிஷன் (19 வயது) என்ற யாழ்ப்பாணத்தை பூர்விக இடமாக கொண்ட இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொ.லை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் ரொறோண்டோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ரொறோண்டோவைச் சேர்ந்த 19 வயதான தமிழ் இளைஞர் அனோஜ் தர்சன் என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும்,
அனோஜ் தர்சன் மீதான குற்றச்சாட்டு முதலாம் நிலை கொ.லைக் குற்றச் சாட்டாக தரம் உயர்த்தப்பட்டதுடன் அவருக்கான பிணையும் மறுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் கொ.ல்லப்பட்டவரை தெரிந்தவர் எனவும், ஒரு வீட்டில் விருந்தில் இருந்து வெளியேறிய பின்னர் அவரை பல முறை கத்தியால் கு.த்தியதாகவும் முன்னர் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
மகிஷன் குகதாசனின் உடல் பிரேத பரிசோதனை வெள்ளிக்கிழமை நடை பெற்ற போதிலும் அந்த அறிக்கை வெளியாகவில்லை.
இந்த நிலையில் அனோஜ் தர்சன் மீதான அடுத்த நீதிமன்ற விசாரணை January 6ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது கனடா ரொறோண்டோ செய்திகள் தெரிவிக்கின்றன .