லண்டனிலிருந்து கிளிநொச்சி வந்த பெண் கொலை; மறைத்து வைத்த நகைகள் மீட்ப்பு!!

0
446

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கடந்த 28.12.2021 அன்று முதலைப்பாலத்தின் கீழ் பெண் ஒருவர் சடமால மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்து வீட்டில் தனிமையில் வாழ்ந்துவந்த நிலையில் வீட்டிற்கு அருகில் வசித்த வீட்டில் இருந்த 21 அகவை இளைஞனும் அவரது 19 அகவை மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இராசலட்சுமி (67) சம்பவ தினத்திற்கு முதல் நாள் தான் தனது வங்கியில் வைப்பில் இருந்த காசை எடுத்துள்ளார். இதனை நன்றாக நோட்டமிட்ட, இந்த பக்கத்து வீட்டு இளைஞர் இராசலட்சுமியை கொ.லை செய்து விட்டு பணத்தையும் நகையையும் கொள்ளையடிக்கவே கொ.லை செய்தமை தெரியவந்துள்ளது,

லண்டனில் தனது மகனோடு வசித்த வந்த இராசலட்சுமி அம்மா, தனது காணியை பராமரிக்க என்றே, கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை சென்று வாழ்ந்து வந்த நிலையில் இவ் சம்பவம் நிகழ்ந்துள்ளது,

கைது செய்யப்பட்ட இளைஞனின் வாக்குமூலப்படி 67 அகவையுடைய இராசலட்சுமி என்ற வயோதிப பெண்ணை கொ.லை செய்து மனைவியின் உதவியுடன் பை ஒன்றிற்குள் சுற்றி அதனை உந்துருளியில் கொண்டு சென்று முதலைப்பாலத்திற்கு கீழ் போட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கொ.லை செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்ப்ட இளம் தம்பதிகள் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here