முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள இராணுவப்பிரிவினை சேர்ந்த ஒருவர் தவறான முடிவின் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
05.01.2022 நேற்று நண்பகல் ஏ.9 வீதி திருமுறுகண்டி பகுதியில் அமைந்துள்ள 11 ஆவது இயந்திர காலால் படைப்பிரிவின் பணியாற்றும் இராணுவ சிப்பாயே இவ்வறான தவறான முடிவினால் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிக்கடுவ காலியினை சேர்ந்த குறித்த படையினன் தங்கூசி நூலினால் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் உடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது பிரோத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது,