தீ விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் பரிதாப மரணம்!!

0
138

இலங்கையில் கஸ்கிஸ்ஸ சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயதுடைய உயர்தரம் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று கல்கிஸை பொலிஸ் பிரிவில் சொயிசாபுற தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் நிலையில் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் இனங்காணப்படாத நிலையில், கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here