முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர், இதன்போது குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளத்து,
இவ்வாறு சடலமாக அடையாளம் கணப்பட்டவர் லோகராசா ராஜினி (வயது-39) என தகவல்கள் தெரிவிக்கிறன,
குறித்த பெண் நான்கு நாட்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதவள சிங்கன் குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் பகுதியில் ஆள் நடமாற்றமற்ற தென்னந் தோட்டக் காணி கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் சடலமாக இன்று சனிக்கிழமை (8) காலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன,
மேலதிக விசாரணையை முள்ளியவளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,