கிளிநொச்சி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!!

0
98

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பிட்டி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் இன்றைய (12) தினம் அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெடிப்புசத்தம் கேட்டு அயலவர்கள் ஒடிவந்து எரிவாயு ரேகுலோட்டரினை அகற்றியதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here