காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிய தாய் ஒருவர் உயிரிழப்பு!

0
152

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த கருப்பையா ராமாயி வயது 78 என்ற தாயே இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்துதடதரக் கோரி போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here