யாழில் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்க முயற்சித்தவர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்!!

0
262

யாழ்ப்பாணம் தென்மராட்சி, மிருசுவில பகுதியில் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்க முயற்சித்த குடும்பஸ்தரை, அப் பகுதி மக்கள் நையப்புடைத்துள்ள சமபவம் ஒன்று நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு திருமணம் முடித்த 42 வயதான ஆசாமியொருவரே இவ்வாறு பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியுடன் அத்துமீறி நடக்க முயற்சித்த ஆசாமியை, உறவினர்கள் நையப்புடைத்ததில் அவரது கை உடைந்ததையடுத்து, அயல்வீட்டுக்காரர்கள் தாக்கியதாக குறிப்பிட்டு குறித்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிறுமியும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், யாழ் போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆசாமி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here