15 வயது சிறுமியுடன் காதல் விவகாரம்; முன்னால் காதலன் கழுத்தறுத்து கொலை!!

0
339

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் இளைஞன் ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளார்.

தங்குமிடம் ஒன்றில் தற்காலிகமாக தங்கிருந்த 15 வயதுடைய சிறுமியுடன் இருந்த நபர் ஒருவரே கொ.லை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடவத்தை என்ட்ரூஸ் லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த அறையில் சிறுமியும் அவரது முன்னாள் காதலனும் ஒன்றாக இருந்ததை கண்ணுற்ற தற்போதைய காதலன் இந்த தா.க்குதலை மேற்கொண்டுள்ளார்.

நேற்றிரவு கடவத்தையில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் தனது முதல் காதலனைப் பார்த்து மீண்டும் குறித்த பெண் உறவை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது பற்றி கேள்விப்பட்டதும் தற்போதைய காதலன் அதிகாலை 3 மணியளவில் சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்ததை அடுத்து தா க்குதலை மேற்கொண்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக இந்த கொ லை நடந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொ லை சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இளைஞன் மற்றும் 15 வயதுடைய சிறுமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here