நாட்டில் இன்று முதல் மீண்டும் மின்வெட்டு!!

0
845

நாட்டில் இன்று முதல் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக இன்றைய தினம் ஒரு மணிநேரமும் நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியேற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரட்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை மேலும் நீடித்து, மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறாவிட்டால் மார்ச் மாத இறுதியில் மின்சார விநியோகத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மாலை 6.30 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான நேரத்திற்கு மின்வெட்டு  இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பிற்பகல் 2.30 மணி முதல் 4 கட்டங்களாக மின்வெட்டை மேற்கொள்வதற்கான யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு குறித்த யோசனை அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்கினால் மின்வெட்டு இடம்பெறும் என்றும் தம்மிக்க விமலரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here