சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதிக்கு தங்கப்பரிசு வழங்கி கௌரவிப்பு!!

0
477

சர்வதேச ரீதியில் தங்கப்பதக்கத்தை வென்று வடமாகாணத்துக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவு வீராங்கனை இந்துகாதேவிக்கு நியூ லலிதா நகைமாளிகை தங்க நகை வழங்கி கௌரவித்துள்ளது.

பாகிஸ்தானில் லாகூரில் அண்மையில் இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50-55கிலோகிராம்எடைப்பிரிவின் குத்துச்சண்டை இறுதி போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற கணேஸ் இந்துகாதேவி முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

எனவே, சாதனை படைத்தவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 25.01.2022 அன்று இந்த நிகழ்வு நியூ லலிதா நகைமாளிகையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது தங்கம் வென்ற இந்துகாதேவிக்கு நியூ லலிதா நகைமாளிகை தங்கநகை ஒன்றினை பரிசாக வழங்கியதுடன் பணப்பரிசினையும் வழங்கியது.

மேலும் குறித்த போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற ஏனைய போட்டியாளர்களுக்கும் நியூ லலிதா நகைமாளிகை பணப்பரிசில்களை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here