யாழில் நடந்த விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய வைத்தியர்கள்!

0
290

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் வைத்தியர்கள் சிலர் தெய்வாதீனமாக தப்பியதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டு மதிலுடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து சென்ற வைத்தியர்களின் வாகனவே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

நேற்று இரவு 12.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கார் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சிறு காயங்களுடன் வைத்தியர்கள் தப்பியுள்ளனர்.

காயமடைந்து மயக்கமடைந்த நிலையில் இருந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here