யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Neuenegg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்,
சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து தனது சொந்த ஊருக்கு தேவை நிமிர்த்தம் சென்ற இளம் குடும்பத்தர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்,
சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் அண்மையில் தனது ஊரான யாழ் புளியங்கூடலுக்கு சென்ற நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்,
இரவு சாப்பிட்டுவிட்டு நித்திரைக்கு சென்றவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்,
இச் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான நல்லையா திருவருட்செல்வன் வயது 57 என்ற இளம் குடும்பத்தரே உயிரிழந்தவர் ஆவார்,
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,