முல்லைத்தீவு நகரில் உள்ள வீடொன்றில் 20 பவுண் நகை கொள்ளையிட்ட நபர்கள் யாழில் கைது!

0
126

முல்லைத்தீவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் இன்றைய தினம் 22.02.2022 யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சாவகச்சேரி நெல்லியடி ஊர்காவற்துறை, பகுதியைச் சேர்ந்த மூவர் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 பவுண் நகை மீட்கப்பட்டுள்ளதாகவும், திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here