யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அ டித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (22) மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன,
அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே இவ்வாறு அ டித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில், அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அ டித்துக்கொலை செய்த பின்னர், அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.