யாழில் தனிமையில் இருந்த பெண்ணை அடித்து கொலை செய்துவிட்டு சங்கிலி அறுப்பு!!

0
188

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அ டித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் (22) மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன,

அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே இவ்வாறு அ டித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில், அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அ டித்துக்கொலை செய்த பின்னர், அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here