யாழில் கைவிடப்பட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த இராணுவம்!

0
119

யாழ் வல்வெட்டித்துறை வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம் நேற்று இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ் வல்வெட்டித்துறைப் பகுதியில் வீதியில் பணப்பை ஒன்று தவற விடப்பட்ட நிலையில், இராணுவத்தினர் குறித்த பணப்பையை மீட்டனர்.

அதில் 20 ஆயிரம் ரூபா பணம், இரண்டு வங்கி அட்டைகள், தேசிய அடையாள அட்டை என்பன காணப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் உரியவர் அடையாளம் காணப்பட்டு பொலிஸார் முன்னிலையில் குறித்த பணப்பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here