யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொ லை செய்துக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல்லியடி கரணவாய் மேற்கு பகுதியில் நேற்று மாலை 6-00 மணியளவில் பாடசாலை மாணவி இவ்வாறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
கரணவாய் மகா வித்தியாலயத்தில் 7 ம் தரத்தில் கல்வி கற்று வரும் பாஸ்கரன் பாஸ்சிகா வயது 12 என்ற மாணவியை உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மாணவியின் சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ் நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,
மாணவியின் பிரிவால் துயருறும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எமது அனுதாபங்கள், மாணவியின் ஆத்மா பிரார்த்திப்போம்