வார இறுதி நாட்களில் (26, 27) மின்சார துண்டிப்பை மேற்கொள்வதற்கான அனுமதியை, சில கட்டுப்பாடுகளுடன் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இந்த வார இறுதி நாட்களில் இரவு வேளையில் மின்சார விநியோக தடையை மேற்கொள்ள வேண்டாம் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதன்படி, பகல் வேளையில் மாத்திரம் மின்விநியோக தடையை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
A,B,C ஆகிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளை (26) மூன்று மணிநேர மின்விநியோக தடையும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு 30 நிமிட மின் விநியோக தடையை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன்,நாளை மறுதினம் (27) A,B,C ஆகிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பகல் வேளையில் இரண்டரை மணிநேர மின் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதுடன், அவை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு அன்றைய தினம் மின்சார தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.