யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் புகையிரத நிலைய கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் இன்று நண்பகல் 12 மணியளவில் மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை கடக்க முற்பட்ட போது, குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது கடுகதி புகையிரதம் இளைஞரை மோதி தள்ளியுள்ளது. உயிரிழந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் விறகு கட்டிக்கொண்டு சென்றதாகவும், இளைஞர் யார் என்று அடையாளம் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்,
சம்பவத்தில் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்தார்,