சாரதியின் தூக்கத்தால் வீட்டுக்குள் புகுந்த லொறி; ஆபத்தான நிலையில் 2 சிறுவர்கள்..!

0
364

லொறியொன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலில் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்று பாதையை விட்டு விழகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் சிறுவர்கள் சிறு காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கந்தளாய் பொலிஸார் தெரிக்கின்றனர்.

இவ் விபத்துச் சம்பவம் இன்று (4) அதிகாலை 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து தம்புள்ளை பகுதிக்குச் சென்ற லொறியொன்றே இவ்வாறு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றினையும் மோதி வீடொன்றினுள் புகுந்துள்ளதாகவும் இதனால் வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்,

மேலும் சாரதியின் நித்திரை கலக்கமும், அதிக வேகமுமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை கந்தளாய் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் பெற எங்களுடைய Viber குரூப் இல் இணைத்திடுங்கள்..Join Viber

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here