முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கனடா ஒட்டோவா மாகாணத்தில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்,
முல்லைத்தீவு முள்ளியவளை பிறப்பிடமாகவும் கனடா ஒட்டோவா மாகாணத்தில் ஒட்டோவா மாகாண பொலிஸ் உத்தியோகத்தர் ஆக கடமையாற்றும் மதியழகன் விஜயாலயன் என்ற 28 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்,
இளைஞனின் தந்தை யா/செங்குந்த இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்,
இளைஞனின் இழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.