கனடாவில் முல்லைத்தீவு இளைஞனின் மரணம்; அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசிய கொடிகள்..!

0
969

முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கனடா ஒட்டோவா மாகாணத்தில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்,

முல்லைத்தீவு முள்ளியவளை பிறப்பிடமாகவும் கனடா ஒட்டோவா மாகாணத்தில் ஒட்டோவா மாகாண பொலிஸ் உத்தியோகத்தர் ஆக கடமையாற்றும் மதியழகன் விஜயாலயன் என்ற 28 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்,

செவ்வாய்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவிக்கின்றனர்,

இவர் அல்கோன்குயின் கல்லூரியில் போலீஸ் படிப்பை படித்த பிறகு நவம்பர் 2020 இல் ஒட்டாவா போலீஸ் சேவையில் பணியமர்த்தப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன,

கனடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் சேர்ந்தார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

புதன்கிழமை அனைத்து ஒட்டாவ காவல்துறை கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது,

இளைஞனின் இழப்பானது இலங்கையில் உள்ள சொந்தங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here