திருகோணமலை மூதூர் பச்சனூர் பகுதியில் சிரமதான நிகழ்விற்காக சென்ற உழவு இயந்திரம் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தளாயில் இருந்து சேருவிலவுக்குச் சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த உழவு இயந்திரத்தில் 21 பேர் சிரமதானம் ஒன்றிற்காக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 பேர் வரை காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் திருகோணமலை மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தோரின் சடலம் திருகோணமலை மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துச் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.