திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தையின் வானில் சிக்குண்டு 2 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் இன்று (7) இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்து திருகோணமலைக்குத் திருமண வைபவத்துக்குச் செல்லத் தயாரானபோது வானைப் பின்னால் தந்தை எடுத்தபோது அதற்குள் சிக்குண்டு மகன் பலியானார் என்று ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தம்பலகாமம் நாயன்மார்திடலைச் சேர்ந்த நசிட்றா என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வான் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.